/* */

நாமக்கல்லில் அரசு வேலை வாங்கி தருதவாக மோசடி: போலி பெண் ஆர்.ஐ கைது

நாமக்கல்லில் அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த போலி பெண் ஆர்.ஐ மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் அரசு வேலை வாங்கி தருதவாக மோசடி: போலி பெண் ஆர்.ஐ கைது
X

நாமக்கல்லில் அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த போலி பெண் ஆர்.ஐ மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல், நல்லிபாளையம் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் நல்லிபாளையம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் திருச்செங்கோடு அருகே உள்ள வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த மகரஜோதி (29) என்பவர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் போல அடையாள அட்டை அணிந்து கொண்டு அப்பகுதியில் சுற்றி வந்தார்.

அவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரிடம், போலியாக மாவட்ட கலெக்டரின் கையெழுத்து போட்டது போன்ற பணி நியமன கடிதத்தை தயாரித்து கொடுத்து இருப்பதாகவும், அரசு வேலை வாங்கித்தருவதாக, முனியப்பன் உள்பட 7 பேரிடம் ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் வாங்கி கொண்டு, ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்பேரில் நல்லிபாளையம் வழக்குப்பதிவு செய்து, போலி ஆர்ஐயாக நடித்து, ஏமாற்றிய மகரஜோதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் சங்கர் (33) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதற்கிடையே மகரஜோதிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது கணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலி பெண் வருவாய் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 11 Feb 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  4. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  5. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  6. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  7. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  9. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்