நாமக்கல்லில் மீன் வளர்ப்பில் தீவன மேலாண்மை இலவச பயிற்சி
நாமக்கல்லில் மீன் வள்ப்பில் தீவன மேலாண்மை குறித்து வரும் 22ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
இதுகுறித்து நாமக்கல் வேளாண்மைஅறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வரும் 22ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மீன் வளர்ப்பில் தீவன மேலாண்மை என்ற தலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் பண்ணைக் குட்டைக்கு தேவையான இடம் மற்றும் நீர் தேர்வு செய்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், மீன் குஞ்சு மற்றும் தாய் மீன்களுக்கான இயற்கை மற்றும் செயற்கை உணவு உற்பத்தி முறை குறித்தும், மத்திய அரசின் மீன் வளர்ப்புக்கான மானியங்கள் குறித்தும், இப்பயிற்சியில் விரிவாக கற்றுத்தரப்படும். பயிற்சியில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளோர் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்ற கூறப்பட்டுள்ளது.