/* */

நாமக்கல் நகராட்சியில் ஏப். 30க்குள் வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ளவர்கள் ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சியில் ஏப். 30க்குள்  வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி
X

நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ளவர்கள் ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-ல், கடந்த 2022ம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 13ம் தேதி முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 84 (1)ன்படி, சொத்து உரிமையாளர் தங்களது 2023-24ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30ம் தேதிக்குள் செலுத்தினால், சொத்து உரிமையாளர்கள் 5 சதவீதம் ஊக்கத்தொகை, அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை பெறலாம்.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் வீடுகள் மற்றும் நிலங்கள் வைத்திருப்பவர்கள், தங்களின் 2023-204ம் ஆண்டிற்கான சொத்து வரியை, இம்மாதம் 30ம் தேதிக்குள் செலுத்தினால், அவர்களுக்கு மொத்த வரியில் 5 சதவீதம் தள்ளுபடி (ஊக்கத்தொகை) வழங்கப்படும். நாமக்கல் நகராட்சி வரி வசூல் மையங்களிலும், நகராட்சி வரி வசூல் அலுவலர்களிடமும் பொதுமக்கள் சொத்து வரியை ஏப்.30க்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம்.

அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். பொதுமக்கள் முன்னதாகவே வரி செலுத்தி நகராட்சி மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 April 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  5. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  6. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  7. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  8. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  9. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  10. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு