Begin typing your search above and press return to search.
மொபட்டில் சென்ற விவசாயி ரோட்டில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு
Accident News- சேந்தமங்கலம் அருகே மொபட்டில் சென்றுகொண்டிருந்த விவசாயி, ரோடு போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
HIGHLIGHTS
Accident News- புதுச்சத்திரம் அருகே உள்ள கதிராநல்லூர் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி ( 55). இவர், நேற்று முன்தினம் இரவு ஒரு மொபட்டில் சிங்களாந்தபுரம் பகுதியில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கு பை-பாஸ் ரோடு அமைக்கும் பணிக்காக ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வரும்போது அவரது மொபட் பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தர். இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2