/* */

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள வீரணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (42), விவசாயி. அவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டுக்கு அருகில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அருகில் இருந்த மின்கம்பியில் நெருப்பு பொறி வந்ததாகவும், அதைப் பார்த்துவிட்டு வருவதாக கூறி தென்னந்தோப்புக்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. சுகுமாரைத் தேடி தென்னந்தோப்புக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்த தென்னை மட்டை மோதி, மின்சாரம் தாக்கி சுகுமாரன் கீழே மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், சுகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Feb 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!