/* */

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழையால் மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் மரவள்ளிக்கிழங்கின் விலை சரிவடைந்து விவாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழையால்  மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாரிக்கப்படுகிறது. மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வரை விற்பனையானது. மாவட்டம் முழுவதும் தொடர்மழை பெய்து வருவதால், விவசாயிகள் கிழங்கு அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மரவள்ளிக்கிழங்கு அறுவடை அதிகரித்துள்ளதால், டன் ஒன்றுக்கு ரூ. 700 வரை விலை குறைந்து ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ. 5 ஆயிரத்து 300க்கு விற்பனையாகிறது. விலை சரிவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 14 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’