Begin typing your search above and press return to search.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாட்டின காளைகளுக்கு சான்று கட்டாயம்: கலெக்டர்
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நாட்டின காளைகளுக்கு, கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின்போது, தமிழர்களின் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இனி ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு இனக் காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இறக்குமதி செய்யப்பட்ட காளைகள், கலப்பின காளைகள், உயர்ரக காளைகள் பங்கேற்க முடியாது.
எனவே நாட்டின ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகத்தை அணுகி கால்நடை மருத்துவர், உதவி மருத்துவரிடம் நாட்டின மாடுகள் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.