Begin typing your search above and press return to search.
புதுச்சத்திரம் அருகே விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
புதுச்சத்திரம் அருகே உடல்நலக் குறைவால் மனமுடைந்த ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர்பட்டியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் ( 42). ஆட்டோ டிரைவர். கடந்த ஒரு மாதகாலமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்தபோது, சிறுநீரகம் செயல் இழந்து விட்டதாக டாக்டர் கூறி உள்ளார்.
இதனால் மனம் உடைந்த கல்யாண சுந்தரம் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்தபோது, விஷத்தை குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி கல்யாண சுந்தரம் உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மனைவி சந்தோஷம் (36) அளித்துள்ள புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.