நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் தற்கொலை முயற்சி
நாமக்கல் எஸ்பி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
நிலப்பிரச்சினை சம்மந்தமாக, மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத்(25), கார் டிரைவர் . இவருக்கு ஜானகி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் இன்று நிலப்பிரச்சினை சம்மந்தமாக புகார் கொடுப்பதற்காக, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு வந்தவுடன், திடீரென தன் கையில் மறைத்து எடுத்துச் சென்ற சானிப்பவுடரை ( விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அருங்கு அவருக்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.