/* */

புதுச்சத்திரம் பிடிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

புதுச்சத்திரம் பிடிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் பிடிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
X

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், டிரைவராக பணியாற்றி வருபவர் பிரபாகரன். இவர் புதுச்சத்திரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களில் குழாய் கிணறு அமைப்பதற்கு அனுமதி பெறுவதற்காக லஞ்சம் பெற்று, அதனை அதிகாரிகளுக்கு தருவதாக புகார் வந்தது.

அதன் அடிப்படையில் இன்று காலை, 10.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றனர். தொடர்ந்து அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, கிராம ஊராட்சி அலுவலர் மற் றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பிடிஓ அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் அங்கு கைப்பற்றப்பட்டுள்ள பணம் மற்றும் ஆவணங்கள் விவரம் தெரியவரும்.

Updated On: 29 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்