/* */

வே.க.பட்டி அருகே குடும்ப தகாராறில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

வே.க.பட்டி அருகே குடும்ப தகாராறில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ஆர்.பி. புதூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (55). விவசாயி. இவர் தனது மனைவி பொன்னி மற்றும் மகள்கள் நித்தியபிரசாதனி (13), ஆனந்தபிரசாதனி (10) ஆகியோருடன் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

இந்தநிலையில் தனது மகளுக்கு விடுமுறை என்பதால் பொன்னி மகள்களை அழைத்துக் கொண்டு மனைவியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்திற்கு சென்றிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் மனைவிக்கு போன் செய்து விவசாய நிலத்தில் வேலை இருப்பதால் உடனே புறப்பட்டு ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். அப்போது பொன்னி சில நாட்கள் கழித்து வருவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை இடும்பன்தோட்டம் வழியாக சென்றவர்கள் மாதேஸ்வரன் அவரது குடிசை வீட்டிற்கு வெளியே கயிற்றால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாதேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 May 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  2. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  3. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  4. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  5. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  8. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்