/* */

பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க 3 நாள் சிறப்பு முகாம்

பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க 3 நாள் சிறப்பு முகாம் மோகனூரில் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க 3 நாள் சிறப்பு முகாம்
X

பிரதமரின் கிஷான் சம்மான் திட்டத்தில், விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்க, மோகனூரில் நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மோகனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பிரதமரின் கிசான் சம்மான் யோஜனா திட்டத்தில், 4 மாதங்களுக்கு ஒருமுறை, ரூ. 2,000 வீதம் விவசாயிகளுக்கு உதவித்தொகை, அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. வரும், ஜூலையில், 14ம் தவணை நிதி விவசாயிகள் பெறுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை, தங்களுடைய சரியான ஆதார் எண்ணை இணைக்காத, ஆதார் எண் விடுபட்டுப் போன விவசாயிகள், வரும், 7ம் தேதி, வளையப்பட்டி தபால் அலுவலகத்திலும், 8ம் தேதி பாலப்பட்டி தபால் அலுவலகத்திலும், 9ம் தேதி மோகனூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திலும், தபால் துறை அலுவலர்களால் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாமில், விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் ஆகியவற்றுடன் நேரில் சென்று, தங்களது கிஷான் திட்ட கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து, விபரங்களை சரிபார்த்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 6 Jun 2023 6:19 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  2. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  3. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  6. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  7. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  8. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
  9. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  10. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!