/* */

வெண்ணந்தூர் அருகே கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

வெண்ணந்தூர் அருகில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தி வந்தவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

வெண்ணந்தூர் அருகே கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
X

வெண்ணந்தூர் அருகே மொபட்டில் ரேசன் அரிசி கடத்தியதாக, போலீசாரால் கைது செய்யப்பட்ட மோகன்.

நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் எஸ்ஐ அகிலன் மற்றும் போலீசார் ராசிபுரம் தாலுக்கா வெண்ணந்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள காலி இடத்தில் மூட்டை, மூட்டையாக ரேஷன்அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து 25 சாக்கு பைகளில் இருந்த 1,500 கிலோ ரேசன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்கா ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் மோகன் (30) என்பவர் மொபட்டில் ரேசன்அரிசி மூட்டைகளை கடத்தி வந்து அங்கு வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகனை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 July 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!