100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மினி மராத்தான்
நாமக்கல்லில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி மினி மராத்தான் பாேட்டிகள் நடைபெற்றது.
நாமக்கல்லில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் ஆகியவை இணைந்து நாமக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவு செய்ய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மராத்தான் ஓட்டம் நடைப்பெற்றது.லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலைகல்லூரியில் தொடங்கிய மினி மராத்தான் போட்டியை மாவட்ட தேர்தல்அலுவலர், மற்றும் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு ஒட்டப் பந்தயம் நடத்தப்பட்டது.
போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவியர் என 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியை சேர்ந்த அரவிந்த் என்ற மாணவரும், பெண்கள் பிரிவில் செல்வம் கல்லூரியை சேர்ந்த கிருத்திகா என்ற மாணவியும் முதலிடம் பிடித்தனர்.