/* */

நாமக்கல் அடுத்த எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு

நாமக்கல் அருகே எருமப்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 650-க்கும் மேற்ப்பட்ட காளைகளும், 400-க்கும் மேற்ப்பட்ட மாடு பிடி வீரர்களும் பங்கேற்பு.

HIGHLIGHTS

நாமக்கல் அடுத்த எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு
X

நாமக்கல் அடுத்த எருமப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியினை வருவாய் கோட்டாட்சியர் கோட்டை குமார், நாமக்கல் எம்.பி சின்ராஜ் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். முன்னதாக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வோம் என மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். போட்டியில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, சேந்தமங்கலம், முள்ளுக்குறிச்சி, தம்மம்பட்டி, சேலம், துறையூர், திருச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 650க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்து வந்த காளைகளை 350-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீர்ர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இதில் காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீர்ர்களுக்கு டி.வி, பிரிட்ஜ், மிக்ஸி, சைக்கிள், கட்டில், வெள்ளிக் காசுகள், சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சோபா, கட்டில் மற்றும் வெள்ளி பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி மருத்துவ குழுவினர்கள், கால்நடை மருத்துவர்கள், காவல், வருவாய்த்துறை என 6 குழுவினர்களும், 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இப்போட்டியினை காண சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்காக பொதுமக்கள் வந்திருந்தனர்.

Updated On: 16 Feb 2021 11:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  4. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  5. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  6. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  7. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  9. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்