/* */

பள்ளிகள் திறப்பு - கிருமிநாசினி அடிப்பு தீவிரம்

நாமக்கல் பள்ளிகளில் கிருமிநாசினி அடிக்கும் பணி தீவிரம்.

HIGHLIGHTS

பள்ளிகள் திறப்பு - கிருமிநாசினி அடிப்பு  தீவிரம்
X

10 மற்றும் 12-ம் வகுப்புகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாளை முதல் துவங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 346 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வது வகுப்பறையை சுத்தம் செய்வது மேலும் வகுப்பறைகளுக்கு கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன் வகுப்பறையில் அமர செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிக்கு வரும் 45 ஆயிரம் மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்குவதற்காக லட்சத்து 52 ஆயிரம் சத்து மற்றும் ஜிங்க் மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாகவும், இவைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கடைபிடிக்க அறிவுறுத்தி நடத்தியுள்ளதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Jan 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  4. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  9. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?