Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழை: பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும், இன்று 4ம் தேதி ஒருநாள் விடுமுறை அறிவித்து, கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விபரம்: நாமக்கல் 0.5 மி.மீ, கலெக்டர் அலுவலகம் 1 மி.மீ, குமாரபாளையம் 11.4 மி.மீ, மங்களபுரம் 3.6 மி.மீ, மோகனூர் 94 மி.மீ, பரமத்திவேலூர் 15 மி.மீ, புதுச்சத்திரம் 38 மி.மீ, ராசிபுரம் 48 மி.மீ, சேந்தமங்கலம் 19 மி.மீ, திருச்செங்கோடு 53 மி.மீ, மாவட்டத்தில் மொத்தம் 283.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.