/* */

குமாரபாளையத்தில் போக்குவரத்து போலீசார் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

குமாரபாளையத்தில் போக்குவரத்து போலீசார் ஊரடங்கு மற்றும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் போக்குவரத்து போலீசார் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
X

கொரோனா ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் போக்குவரத்து போலீசார்.

மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கு ஞாயிறு அன்று அமல்படுத்தப்படவுள்ளது. குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். அதில் முகக் கவசம் அணியாமல் வந்த ஓட்டுனர்களிடம் முகக் கவசம் அணிந்து வாகனம் ஓட்ட அறிவுறுத்தினர்.

மேலும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஆட்கள் வந்தால் சமூக இடைவெளி பின்பற்றுங்கள் என அறிவுறுத்தினர். கிருமிநாசினி அடிக்கடி பயன்படுத்த கேட்டுக்கொண்டனர். கண்ணாடி தூக்கி விடப்பட்டு இருக்கும்போது எதுக்கு முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்ட நபர்களுக்கு அறிவுரை கூறி அபராதம் விதித்தனர்.

ஊரடங்கு நாளில் அவசியம் இல்லாமல் வாகனங்களை எடுத்துக்கொண்டு வெளியில் வராதீர்கள் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து எஸ்.ஐ., வெங்கடேசன், ஏட்டுக்கள் சுகுமார், ராதாகிருஷ்ணன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Updated On: 22 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  3. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  8. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  9. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்