/* */

பள்ளிபாளையத்தில் நகை திருடிய பெண் சி.சி.டி.வி. கேமராவால் சிக்கினார்

பள்ளிபாளையத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை, வீட்டின் உரிமையாளர் சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் நகை திருடிய பெண் சி.சி.டி.வி. கேமராவால் சிக்கினார்
X

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். பெட்டிக்கடை நடத்தி வருகிறார். தனது பேத்தியை குளிப்பாட்ட, கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி என்பவர், கடந்த நான்கு மாதங்களாக வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகள் காணாமல் போவதை கண்டு சந்தேகமடைந்த குணசேகரன் வீட்டில் பீரோவிற்கு எதிராக யாருக்கு தெரியாமல் சிசிடிவி கேமராவை பொறுத்தி கண்காணித்து வந்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வந்ததில், வீட்டில் குழந்தையை குளிப்பாட்ட வந்து செல்லும் லட்சுமி, யாரும் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து நகைகளை எடுத்து செல்வது தெரியவந்தது.

பள்ளிபாளையம் போலீசாரிடம், சிசிடிவி ஆதாரத்துடன் குணசேகரன் கொடுத்தபுகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்கு தண்ணீர் ஊற்ற வந்த லட்சுமியை போலீசார் கைது செய்து 5பவுன் தங்க நகைகளை மீட்டனர். வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை சிசிடிவி கேமராவை வைத்து சாமர்த்தியமாக வீட்டின் உரிமையாளர் பிடித்து கொடுத்திருப்பதற்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 22 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  4. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  5. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  6. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  7. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  8. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  9. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  10. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...