Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கூட்டம்
Today Meeting -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க ஆலோசனை கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது.
HIGHLIGHTS
Today Meeting - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க ஆலோசனை கூட்டம் காந்தி சரவணன் தலைமையில் குமாரபாளையத்தில் நடைபெற்றது. கிளை தலைவராக பாஸ்கரன், உதவி தலைவராக குணசேகரன், செயலராக காந்தி சரவணன், உதவி செயலராக செல்வராஜ், பொருளராக மெய்யப்பன் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். ஜூன் 26ல் திருச்செங்கோட்டில் நடைபெறவுள்ள மாவட்ட மாநாட்டில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பது, குமாரபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள நூலகங்கள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2