/* */

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் அமைக்கப்பட்ட மேடையால் விபத்து அபாயம்

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் அமைக்கப்பட்ட மேடையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் அமைக்கப்பட்ட மேடையால்   விபத்து அபாயம்
X

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் அமைத்த மேடையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பஸ் நிறுத்த பகுதியில் உள்ள வாய்க்காலில் ஆங்கிளால் இரு கால்கள் ஊன்றப்பட்டு, படித்துறை அருகே மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலில் வரும் செடி,கொடிகள் செல்ல வழியின்றி சிக்கி கொள்கிறது. வாய்க்காலில் பெரியவர்கள் துணி துவைக்க வரும்போது, கூட வரும் குழந்தைகள் இந்த மேடை மீது விளையாடி வருகிறார்கள். இவர்கள் வாய்க்காலின் ஆழமான பகுதியில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில குடிமகன்கள் இதன் மீது அமர்ந்து மது குடித்து வருகிறார்கள். இவர்கள் தவறி வாய்க்காலில் விழுந்தாலும் போதையில் எழுந்திருக்க முடியாமல் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் இது போல் வாய்க்காலில் மேடை அமைக்க அனுமதி கிடையாது. அப்படி யார் போட்டாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், அந்த மேடை உடனடியாக அகற்றப்படும் என்றனர்.

Updated On: 7 Sep 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  7. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  8. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  10. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...