/* */

பள்ளிபாளையம் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை

வட மாநில ஆர்டர்கள் இல்லாததால் பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை
X

பவர்லூம் தறி (மாதிரி படம் )

பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக வெடியரசம்பாளையம்பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் உள்ளன.

தற்போது கொரோனா பரவல் காரணமாக வெளி மாநில குறிப்பாக வட மாநிலங்களுக்கான விற்பனை முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இதனால், இப்பகுதியில் இயங்கி வந்த விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விசைத்தறி உரிமையாளர் ஒருவர் கூறும்போது, நாங்கள் உற்பத்தி செய்யும் துணிகள் குஜராத், லக்னோ, டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வட மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அங்கு விற்பனை சரிந்துள்ளது. அதனால் எங்களுக்கு ஆர்டர் குறைந்துவிட்டது. ஊரடங்கும் அறிவித்துவிட்டதால் அங்கிருந்து ஆர்டர்கள் கிடைக்கவில்லை. நாங்கள் உற்பத்தி செய்த துணிகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. கூடுதலாக உற்பத்தி செய்து இருப்பு வைத்தால் நஷ்டம் வரும். அதனால், விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளோம் என்றார்.

Updated On: 23 April 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது