/* */

குமாரபாளையம்: வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையத்தில், வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம்: வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை
X

தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், அருந்ததியர் தெரு பாலம் அருகே,  மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில், மழையால் சாய்ந்து விழுந்துள்ள மரம்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், அருந்ததியர் தெரு பாலம் அருகே மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் செல்கிறது. அண்மையில் பெய்த கனமழையின்போது, மரம் ஒன்று சாய்ந்து, வாய்க்காலில் விழுந்தது.

இது, இதுவரை அகற்றப்படவில்லை. இதனால், தண்ணீரில் மிதந்து வரும் செடி கொடிகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் யாவும் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி இப்பகுதி பொதுமக்கள், பொதுப்பணித்துறையினருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

நாளுக்குநாள் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், வாய்க்காலில் சாய்ந்த மரத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 4 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...