Begin typing your search above and press return to search.
திமுக உட்கட்சி தேர்தல்: குமாரபாளையத்தில் கட்சியினர் வேட்பு மனு சமர்ப்பிப்பு
குமாரபாளையத்தில் தி.மு.க. உட்கட்சி தேர்தல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் தி.மு.க. உட்கட்சி தேர்தல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
குமாரபாளையம் நகர 33 வார்டு பொறுப்பாளர்களுக்கான தி.மு.க. உள்கட்சி தேர்தலில், ஏப். 22 வேட்புமனு தாக்கல், ஏப். 27ல் பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஒப்படைத்தல், ஏப். 28ல் உள்கட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க. உள்கட்சி தேர்தல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில், மேலிட பார்வையாளர்கள், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளரும், வழக்கறிஞருமான கிரிசங்கர், குத்தாலம், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் பெற்று கொண்டனர். இன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட உள்ளது. இதில் நிர்வாகிகள் துணை சேர்மன் வெங்கடேசன், அன்பழகன், அன்பரசு, ராஜ்குமார், ரவி, முருகன், கதிரவன்சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.