/* */

குமாரபாளையம் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுவதாக புகார்

குமாரபாளையம் அருகே கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதால் கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுவதாக புகார்
X

குமாரபாளையம் கிழக்கு கரை வாய்க்காலில் குழாய் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது.

குமாரபாளையம் அருகே கிழக்கு கரை வாய்க்காலில் வீரப்பம்பாளையம் கூளையன்காடு பகுதியில் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது.

குமாரபாளையம் அருகே கிழக்கு கரை வாய்க்காலில் வீரப்பம்பாளையம் கூளையன்காடு பகுதியில் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் இருந்து பலரால் டியூப் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயம், கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வீரப்பம்பாளையம் கூளையன்காடு பகுதியில் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் தண்ணீர் பலரால் டியூப் மூலம் திருடப்பட்டு அவர்கள் நிலத்திற்கு பயன்படுத்துவது போக, விற்பனையும் செய்து வருகிறார்கள். மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருந்த அருந்ததியர் காலனி மயான வழியில், சமரசம் ஏற்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த தண்ணீர் செல்வதால் கான்கிரீட் யாவும் அடித்து செல்லப்படுகிறது. பல வகைகளில் இடையூறு ஏற்படுத்தும் இந்த திருட்டுக்கு பொதுப்பணித்துறை பணியாளர்கள் உதவி செய்து வருவதுதான் உச்ச கட்ட தகவல். இப்படிப்பட்ட பணியாளர்கள் மீதும், தண்ணீர் திருடும் நபர்கள் மீதும், தக்க நடவடிக்கை எடுத்து கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல அதிகாரிகள் உதவிட வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

இந்த புகார் தொடர்பாக பொதுப்பணித்துறை உதவி முதன்மை பொறியாளர் சுவாமிநாதனிடம் கேட்ட போது வாய்க்கால் நீரை டியூப் மூலம் திருடுவது சட்டப்படி குற்றம். இது குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 27 July 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...