/* */

குமாரபாளையம்: தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை

குமாரபாளையத்தில் தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையம்: தாய் திட்டியதால் கல்லூரி   மாணவி தற்கொலை
X

குமாரபாளையம் அம்பேத்கார் தெருவில் வசிப்பவர் சுதர்ஷினி, 18. தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. கணிதம் படித்து வந்தார். இவரது அப்பா ரமேஷ், 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அம்மா ராதிகா, 41, கூலி வேலை செய்து வளர்த்து வந்தார்.

நேற்று காலை 11:30 மணியளவில் சுதர்ஷினி வெளியில் சிறுமிகளிடம் விளையாடிக்கொண்டு இருந்த போது, அவரது அம்மா ராதிகா, மார்க் குறைவாக எடுத்து விட்டு, விளையடிகொண்டு இருக்கியா? என்று திட்டி விட்டு மார்க்கெட் சென்று விட்டார்.

இதன் பின்னர், உறவினர் சிவகாமி, சுதர்ஷினி தூக்கு மாட்டிக் கொண்டது குறித்து, ராதிகாவிடம் கூறியுள்ளார். ஓடி வந்து பார்த்து, சுதர்ஷினியை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்து விட்டார் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இறந்த சுதர்சினிக்கு, ஐஸ்வர்யா என்ற தங்கை, ரூபன்சந்திரன் ஆகிய தம்பி உள்ளனர்.

Updated On: 24 April 2022 3:05 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  4. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  5. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  6. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  7. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  8. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  9. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  10. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...