/* */

பள்ளிபாளையம் சாலைகளில் 'பறக்கும்' பஸ்கள் - பொதுமக்கள் குதூகலம்

பொதுப்போக்குவரத்து தொடங்கியதால், பள்ளிபாளையம் சாலைகளில் பஸ்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் சாலைகளில் பறக்கும் பஸ்கள் - பொதுமக்கள் குதூகலம்
X

தொலைதூரப் பேருந்து ஒன்று, பள்ளிபாளையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கிறது.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள், ஊரடங்கு தளர்வால் இன்று முதல் இயங்கத் தொடங்கிவிட்டன. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப்பகுதியில் இன்று காலை பள்ளிபாளையம் நகராட்சி ஊழியர்கள் பேருந்துகளுக்கு கிருமிநாசினி மருந்துகள் தெளித்தனர்.அதன் பிறகு பயணிகள் போக்குவரத்து தொடங்கியது.

கணிசமான எண்ணிக்கையில் உள்ளூர் மற்றும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் கொரோனா பரவல் காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால், அருகிலுள்ள ஈரோடு, திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த பொதுமக்கள், மீண்டும் பேருந்துகளை பார்த்ததும், இனிமேல் தடையின்றி வேலைக்கு செல்லலாம் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த இரு மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பள்ளிபாளையம் சாலைகள், மீண்டும் பேருந்துகள், வாகனங்களின் நடமாட்டத்தால் பரபரப்பாக உள்ளன.

Updated On: 5 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!