/* */

குமாரபாளையத்தில் அண்ணா பிறந்தநாள்: சிலைகளை தூய்மைபடுத்திய நகராட்சி பணியாளர்கள்

குமாரபாளையத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நகராட்சி பணியாளர்கள் சிலைகளை தூய்மைபடுத்தினர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அண்ணா பிறந்தநாள்: சிலைகளை தூய்மைபடுத்திய நகராட்சி பணியாளர்கள்
X

குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் சிலை நகராட்சி பணியாளர்களால் தூய்மைப்படுத்தப்பட்டது.

செப்டம்பர் 15ல் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் தி.மு.க. அ.தி.மு.க, ம.தி.மு.க., தே.மு.தி.க., அ.ம.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கொண்டாடுவது வழக்கம். அ.தி.மு.க. சார்பில் நகர செயலர் நாகராஜன் தலைமையில் ஊர்வலமாக வந்து சென்று அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது நடைமுறையாக இருந்து வந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊர்வலத்தை தவிர்த்து, செப்.15 காலை 09:30 மணியளவில் டூவீலரில் அக்கட்சியினர் புதிய தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.

இதே போல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதனையொட்டி இரு இடங்களில் உலா அண்ணாவின் திருவுருவச்சிலைகள் தூய்மை படுத்தப்பட்டது.

Updated On: 14 Sep 2021 3:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்