நாகூர் ஆண்டவர் தர்காவின் புதிய அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
உலக பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்ஹாவின் புதிய அறங்காவலர் குழு தலைவராக செய்யது முகமது காஜி ஹுசைன் சாகிப் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உள்ள உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் செய்யது அப்துல் காதிர் நாயகம் தர்காவின் புதிய அறங்காவல் குழு தலைவர் அறங்காவல் குழு தலைவர் தேர்வு இன்று நடை பெற்றது.
இதில், தற்போதைய அறங்காவல் குழு தலைவர் காமில் சாகிப்பின் பதவிக்காலம் நாளை மறுநாள் முடிவடைய உள்ளதால் 11 அறங்காவல் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய தலைவர் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை செய்தனர். இதில் அறங்காவல் குழு உறுப்பினர் செய்யது முகமது காஜி ஹுசைன் சாகிப் மேனேஜிங் டிரஸ்டியாக ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அறங்காவல் குழு தலைவராக பதவி வழங்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சன்னதியில் செய்யது முகமது காஜி ஹுசைன் சாகிப் தலைமையில் சிறப்பு துவா செய்யப்பட்டது. மேலும் ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் தமிழக சிறுபான்மை உறுப்பினர் தமீம் அன்சாரி புதிதாக தேர்வு செய்யப்பட்ட செய்யது முகமது காஜி ஹுசைன் சாகிப்க்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.