/* */

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

மதுரையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
X

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், கலந்து கொண்ட 45 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், கலந்து கொண்ட 45 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.

மதுரை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவ்வலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனம் மூலம் பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதிகளுக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களிடம் பணி பெற்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்று (08.12.2021) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடத்தப்பட்டது.

அதில் ,7 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. தனியார் நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளிடம் நேர்காணல் நடத்தி அதில், தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பணி நியமனங்களை வழங்கினார்கள். இம் முகாம் மூலம், மொத்தம் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.

மேலும், மாவட்ட தொழில் மையம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு தேவையான பயிற்சிகளும், வழிகாட்டுதல்களும் இம்முகாமில், வழங்கப்பட்டது. இதில், தகுதியானவர்களுக்கு வங்கி மூலம் கடன் பெற்று சுய தொழில் புரிய மாற்றுத்திறனாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவி மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Dec 2021 2:54 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை