/* */

திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது

திருமங்கலம் பெரிய கடை வீதியில், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
X

கைப்பற்றப்பட்ட கடத்தல் அரிசி. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் பெரியகடை வீதி பகுதியில், விஸ்வநாதன்(47) என்பவர் ரேஷன் அரிசியை கடத்தப்படுவதாக மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருமங்கலம் பெரியகடைவீதி பகுதியில், உணவு கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது. விசுவநாதன் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 40 கிலோ எடையில் 118 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது, கிட்டத்தட்ட 4 3/4 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி ஆகும்.

இதனை தொடர்ந்து போலீசார், ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விஸ்வநாதன் மீது அத்தியாவசிய பொருட்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

Updated On: 26 Feb 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  2. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  3. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  4. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  5. திருப்பரங்குன்றம்
    கோயில்களில், இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா!
  6. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  7. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  8. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்