/* */

மதுரையில் பண்டிகை கால கைத்தறி கண்காட்சி விற்பனை தொடக்கம்

இக்கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறுகிறது

HIGHLIGHTS

மதுரையில்  பண்டிகை கால கைத்தறி கண்காட்சி விற்பனை தொடக்கம்
X

கைத்தறி துறை நடத்தும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  மதுரையில் தொடங்கிய  சிறப்பு தள்ளுபடி பட்டு கைத்தறி கண்காட்சி 

மதுரையில், கைத்தறி துறை நடத்தும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர இன்று தொடக்கி வைத்தார்.

கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுஜவுளி இரகங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையினை மேம்படுத்தி தொடர் வேலைவாய்ப்பின் மூலம் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பொங்கல்-2022 பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் கைத்தறி துறையின் சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை எல்.என்.எஸ். இல்லம், 24 ஜடாமுனி கோவில் தெரு, மதுரையில் 17.12.2021 முதல் 30.12.2021 முடிய நடத்தப்படவுள்ளது.

இக்கண்காட்சியில் காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், கோவை திருப்பூர் மற்றும் இராசிபுரம் மென்பட்டு சேலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் நுகர்வோர்கள் வாங்கிப் பயன்பெறும் வகையில், பட்டு இரகங்களுக்கு 10 முதல் 65 வரை சிறப்பு தள்ளுபடி மற்றும் அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பொங்கல் 2021 கைத்தறி சிறப்பு பட்டு கண்காட்சியில் ரூ.144.05 இலட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு விற்பனை குறியீடு ரூ.200.00 இலட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டு வாங்கி பயனடையலாம் என ஆட்சித்தலைவர்.அனீஷ் சேகர தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  4. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  6. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’