/* */

திருப்பரங்குன்றம் அருகே மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

நேரடித்தேர்வு நடத்துவதைக்கைவிட்டு ஆன்லைன் மூலம் தேர்வை நடத்த வலியுறுத்தி மாணவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் அருகே மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
X

திருப்பரங்குன்றம் அருகே மன்னர் திருமலை கல்லூரி நிர்வாகம் விடுமுறை அறிவித்தும் குறுஞ்செய்தி மூலம் போராட்டத்துக்கு திரண்ட மாணவர்கள்

திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஆன்லைன் தேர்வுகளை நடத்தக் கோரி இரண்டாவது நாளாக கல்லூரி முன் மறியல் போராட்டம் செய்ய வந்த மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.

மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள மன்னர் திருமலை கல்லூரியில் நடப்பு நவம்பர் மாத பருவ தேர்வுகளை (ஆப்லைன்) ரத்து செய்து கல்லூரி நிர்வாகம் ஆன்லைன் தேர்வுகள் என அறிவிக்க கோரி மாணவர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்த வந்தனர். மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் தங்கதுரை, திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் ரவி ஆகியோர் கல்லூரி விடுமுறை அறிவித்தும் திரண்ட 60-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். பருவத்தேர்வுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப் பட்டு வந்தது..

அது பிடிஎப் பைல்களாக உள்ளது. அதை மாற்றி படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ள சூழ்நிலையில், தற்போது, கல்லூரி நிர்வாகம் ஆன்லைன் தேர்வு இல்லாமல் நேரடி தேர்வு எழுதச் சொல்லி மாணவர்களை வற்புறுத்துவதால், தங்களால் தேர்வு எழுத இயலாத சூழ்நிலையில் உரிய பாடத்திட்டங்களை படிக்க முடியாததால், ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ,2வது நாளாக மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த திரண்டனர். பாதுகாப்பு பணியில் காவல் துணை ஆணையர் தங்க துரை மற்றும் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் ரவி தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில ஈடுபட்டு வருகின்றனர்..

Updated On: 17 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  2. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  3. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  7. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  8. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  9. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  10. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை