/* */

சோழவந்தான் அரசு போக்குவரத்துகழக பணிமனையில் ஓட்டை உடைசல் பஸ்கள்

சோழவந்தான் அரசு போக்குவரத்துகழக பணிமனையில் ஓட்டை உடைசல் பஸ்கள் இயக்கப்படுவதாக புகார்கள் கூறப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

சோழவந்தான் அரசு போக்குவரத்துகழக பணிமனையில் ஓட்டை உடைசல் பஸ்கள்
X

மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்து.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பணிமனையில் இருந்து 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில், பல்வேறு பேருந்துகள் போதிய பராமரிப்பு இல்லாததன் காரணமாகவும் பேருந்து சீட்டுகள் இல்லாமலும் சைடு கண்ணாடிகள் எப்போது விழும் என்ற நிலையிலும் படிக்கட்டுகள் பெயர்ந்த நிலையிலும், இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது

குறிப்பாக ஒரு சில பேருந்துகளில் டிரைவர் சீட்டுக்கு அருகில் உள்ள பகுதியானது மோசமான நிலையில் இருப்பதால், பேருந்து இயக்கும்போது கடமுடா என்று சப்தம் வந்து கொண்டே உள்ளது. இதனால், பேருந்தை இயக்கும் ஓட்டுனர்கள் அச்சத்துடனும் கடும் மன அழுத்தத்துடனும் பேருந்தை இயக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத ஓட்டுநர் கூறும் போது, மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து குறுவித்துறைக்கு செல்லும் 1238 என்ற எண் கொண்ட 93 ஆம் நம்பர் பேருந்து மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. அதுவும் பேருந்தை இயக்குவது பெரும் சவாலாக உள்ளது. பஸ்ஸை, ஸடார்ட் செய்தாலே பயங்கர சத்தத்துடன் கட கட என பெரிய சத்தத்துடன் பேருந்து செல்வதால் உள்ளே பயணிக்கும் பயணிகள் ஒருவித அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

மேலும், பேருந்து நிறுத்தங்களில் நடத்துனர் விசில் அடித்தாலும் ஓட்டுநருக்கு கேட்காததால் நிறுத்தங்களை தாண்டி பேருந்துகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் பயணிகளுக்கும் நடத்துனர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசு போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓட்டுனர்கள் போக்குவரத்து கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 25 March 2024 9:04 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...