/* */

வாடிப்பட்டி அருகே அரசு பேருந்து மோதியதில் மூதாட்டி மரணம்

வாடிப்பட்டி அருகே அரசு பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

வாடிப்பட்டி அருகே அரசு பேருந்து மோதியதில் மூதாட்டி மரணம்
X

மதுரை அரசு மருத்துவமனை முகப்பு தோற்றம்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே, மதுரை சாலையில் உள்ள மேட்டுநீரேத்தான் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மனைவி பிச்சையம்மாள். மூதாட்டியான இவர், தனது மகன் கார்த்திக் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக எதிரே வேகமாக வந்த அரசு பேருந்து மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிச்சையம்மாள் பலத்த காயம் அடைந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்ததும் வாடிப்பட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மூதாட்டி சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வாடிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணம் அரசு பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவா? பேருந்தை வேகமாக ஓட்டி வந்தாரா? அல்லது இருசக்கர வாகனத்தில் தாயுடன் வந்த கார்த்திக் போக்குவரத்து விதிமுறையை மீறினாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 10 Jun 2022 8:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்