வாடிப்பட்டி அருகே அரசு பேருந்து மோதியதில் மூதாட்டி மரணம்
வாடிப்பட்டி அருகே அரசு பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே, மதுரை சாலையில் உள்ள மேட்டுநீரேத்தான் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மனைவி பிச்சையம்மாள். மூதாட்டியான இவர், தனது மகன் கார்த்திக் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக எதிரே வேகமாக வந்த அரசு பேருந்து மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிச்சையம்மாள் பலத்த காயம் அடைந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்ததும் வாடிப்பட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மூதாட்டி சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வாடிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணம் அரசு பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவா? பேருந்தை வேகமாக ஓட்டி வந்தாரா? அல்லது இருசக்கர வாகனத்தில் தாயுடன் வந்த கார்த்திக் போக்குவரத்து விதிமுறையை மீறினாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.