/* */

மதுரையில் இளைஞரை வெட்டி படுகொலை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல்

எஸ் .எஸ். காலனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

HIGHLIGHTS

மதுரையில் இளைஞரை வெட்டி படுகொலை செய்த  ஆறு பேர் கொண்ட கும்பல்
X

கொலையாளிகளைத்  தடுக்க முயற்சி செய்தபோது தாக்கப்பட்ட  பிரகாஷின் சித்தி வாசுகி

மதுரையில் இளைஞரை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை எஸ். எஸ். காலனி காவல் எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ( 25.). ஆட்டோ மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் வீட்டு வாசலில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிக்க முயற்சித்தனர். அதை தடுக்க முயற்சி செய்த பிரகாஷின் சித்தி வாசுகியையும் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது.

மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்த எஸ் .எஸ். காலனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காயம் பட்ட வாசுகியை 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் இரட்டை கொலை நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Updated On: 28 Aug 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  2. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  3. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  5. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  6. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  8. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  10. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!