/* */

மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு இருவர் தீக்குளிக்க முயற்சி

மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு இருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு இருவர் தீக்குளிக்க முயற்சி
X

பைல் படம்

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியினர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரிகுமார். இவரது மனைவி லட்சுமி. ஹரி குமாருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே நீண்ட நாட்களாக அவர்கள் வீட்டு அருகே உள்ள மூன்று அடி நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க இருவரும் வந்தனர். அப்போது, திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அவர்களை பாதுகாப்புக்காக இருந்த போலீசார் மீட்டு, தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவரிடமும் விசாரித்த பின் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

Updated On: 5 Jan 2024 7:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  4. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  5. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  6. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  7. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  9. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  10. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!