/* */

மதுரையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

1.5.22 முதல் மதுரை மாநகர போக்குவரத்து மாற்றம் குறித்த காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

மதுரையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
X

போக்குவரத்தில் மாற்றம் தொடர்பாக பொதுமக்களுக்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரை மாநகர், பிடிஆர் சிலை நத்தம் ரோடு சந்திப்பில், பறக்கும் பாலம் இணைக்கும் பணி ஆரம்பிக்க இருப்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் நலனை கருத்தில்கொண்டு கீழ்க்கண்டவாறு நாளை 01.05.2022 ம் தேதி முதல் சிறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

1.பிடிஆர் சிலை சந்திப்பில் இருந்து நத்தம் ரோடு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தல்லாகுளம் காவல் நிலையம் வழியாக எஸ்.பி. பங்களா சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி செல்ல வேண்டும்.

2. நத்தம் சாலையில் எஸ்.பி. பங்களா சந்திப்பிலிருந்து பிடிஆர் சிலை சந்திப்பிற்கு இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மத்திய ரக மற்றும் கனரக வாகனங்கள் எஸ்.பி. பங்களா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பாரதி உலா சாலை, தாமரைத்தொட்டி சந்திப்பு, ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். மேற்கண்ட வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Updated On: 1 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!