/* */

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஜாதி வர்ணம் பூச வேண்டாம்: விவசாயிகள் கோரிக்கை

அவனியாபுரம் பகுதி விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டு போட்டிக்கு  ஜாதி வர்ணம் பூச வேண்டாம்:  விவசாயிகள் கோரிக்கை
X

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த  அவனியாபுரம் பகுதி விவசாயிகள்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஜாதி வண்ணம் பூச வேண்டாம் என அவனியாபுரம் பகுதி அனைத்து விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விமரிசையாக நடைபெறும். குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது.

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஆகும். தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். தை முதல் நாளாம் பொங்கல் திருநாள் அன்று நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்குத் தென் மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்படுகிறன.

ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

இதில், தை முதல்நாளில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் கிராம கமிட்டியினர் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால் கடந்த 4 ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது ஓய்வுபெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் அரசே நடத்திவந்தது.

இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி -15ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியினை அவனியாபுரம் தென்கால் பாசன கால்வாய் விவசாயிகள் சங்கத்தினரே நடத்த அனுமதி அளிக்க கோரி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அரசின் வழிகாட்டுதலோடு அனைத்து முன்னேற்பாடுகளை செய்து அமைதியான முறையில் நடத்திட விவசாய சங்கத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு சாதி சாயம் பூச வேண்டாம் எனவும், வருவாய் கோட்டாச்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தி சாதி சங்கங்களை சிலர் ஒருங்கிணைப்பதாகவும், அவனியாபுரம் அமைதி பேச்சுவார்த்தை குழுவில் காளை வளர்ப்போரையும் இணைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் சாதி சங்கங்களுக்கோ, தனி அமைப்பினருக்கோ ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதியை அளிக்க கூடாது. அவனியாபுரம் பகுதி விவசாயிகள் காளை வளர்ப்போர் மாடுபிடி வீரர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் எனவும் கூறினர். இது தொடர்பான மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரிடமும் வழங்கினர்.


Updated On: 27 Dec 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  3. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?