/* */

கொரோனா தொற்று: மதுரை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம்

கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார்

HIGHLIGHTS

கொரோனா தொற்று:  மதுரை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம்
X

 ஒத்தக்கடை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், அப்பகுதியில் வந்த பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணித்த பொதுமக்களுக்கும் முகக் கவசங்களை வழங்கினார் 

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றினைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் காவல் அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வருகின்றனர். இன்று ஒத்தக்கடை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், அப்பகுதியில் வந்த பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணித்த பொதுமக்களுக்கும் முகக் கவசங்களை வழங்கி பொதுமக்கள் பொது இடங்களில் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அத்துடன் மதுரை மாவட்டத்தில் மேலும் பொதுமக்களுக்கு வேண்டிய விழிப்புணர்வு வழங்கி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மதுரை மக்களுக்கு அறிவுரை வழங்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்களும் காவல்துறைக்கு தங்களுடைய ஒத்துழைப்பை நல்கி கொரானா பரவலை கட்டுப்படுத்த உதவிடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 10 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  4. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  5. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  6. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  7. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  9. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  10. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை