/* */

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா..!

விவேகானந்தா கல்லூரியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது

HIGHLIGHTS

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ஓய்வு  பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா..!
X

விவேகானந்தா கல்லூரியில், ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பெறும் விழா நடந்தது. 

மதுரை:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், பணி நிறைவு பெறும் பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி, சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் குமரேசன், கணிதத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ராஜன், விலங்கியல் துறை உதவி பேராசிரியர் முத்துப்பாண்டி மற்றும் தமிழ் துறை இணை பேராசிரியர் முனைவர் ராமர் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் அங்கமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கல்லூரி நிர்வாகம் சார்பில், பணி நிறைவு பெறும் வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் காளியப்பன், கணிதத் துறை தலைவர் முனைவர் சிரஞ்சீவி, விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் பொன்ராஜ் தமிழ் துறை தலைவர் முனைவர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆய்வக உதவியாளர் ராஜாராம் ஆகியோருக்கு சிறப்பும் பாராட்டும் செய்விக்கப்பட்டது.

பணி நிறைவு பெறும் பேராசிரியர்கள் ஏற்புரை வழங்கினர். அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி இறை வணக்கம் மற்றும் நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

Updated On: 15 April 2024 9:29 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்