/* */

சூளகிரி அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம்: கிராம மக்களுக்கு எச்சரிக்கை

சூளகிரி அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் தஞ்சமடைந்ததால் கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

சூளகிரி அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம்: கிராம மக்களுக்கு எச்சரிக்கை
X

சூளகிரி அருகே தஞ்மடைந்த யானைகள் கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஊடேதுர்க்கம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 20 க்கும் மேற்ப்பட்ட காட்டுயானைகள் இன்று அதிகாலை சானமாவு வனப்பகுதிக்கு வந்து தஞ்சமடைந்துள்ளது.

இதன் காரணமாக பீர்ஜேப்பள்ளி, கொம்பே பள்ளி, நாயகனப்பள்ளி, ராமாபுரம் ஆகிய கிராம விவசாயிகள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வனத்துறையினர் தண்டூரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காரணமாக யானைகள் இருப்பது கூட கண்களுக்கு தெரியாது. எனவே நன்றாக வெளிச்சம் தென்பட்ட பிறகு வயல்வெளிக்கு செல்லவும். அதேசமயம் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் காவல் காக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

Updated On: 18 Dec 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!