Begin typing your search above and press return to search.
கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: அரசு இணைச்செயலாளர் தொடக்கம்
கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு இணைச் செயலாளர் பழனிசாமி இன்று துவக்கி வைத்து தடுப்பூசி போடும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், கோவிந்தன் மருத்துவர் செல்வி, நகராட்சி ஆணையர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.