Begin typing your search above and press return to search.
கோவில் பாதுகாவலர் பணி: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி மாவட்ட கோவில்களில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கு முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பாதுகாவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட கோவில்களில், காலியாக உள்ள கோவில் பாதுகாவலர் பணியை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த பணிக்கு 53 வயதிற்கு மேற்பட்ட விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
எனவே, விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணிக்கு நேரில் சென்று விண்ணப்பம் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.