சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்கிய வங்கிகளுக்கு விருது

கரூா் மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்கிய வங்கிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்கிய வங்கிகளுக்கு விருது
X

இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு முதல் பரிசை வழங்கும் மாவட்ட ஆட்சியர்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் அதிக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு முதல் பரிசும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு இரண்டாம் பரிசும், இந்தியன் வங்கிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.

2021 - 22ஆம் ஆண்டு அதிகளவில் மகளிர் திட்ட சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதில் மாவட்ட அளவில் முதல் பரிசு குளித்தலை இந்தியன் வங்கிக்கு ரூ.15 ஆயிரத்துக்கான காசோலை, விருது மற்றும் சான்றுகளும், இரண்டாம் பரிசு பஞ்சமாதேவி இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு ரூ.10ஆயிரத்துக்கான காசோலை, விருது மற்றும் சான்றுகளும், மூன்றாம் பரிசு கரூா் எச்டிஎப்சி வங்கிக்கு ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை, விருது மற்றும் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினார். மேலும் 2021- 22 ம் ஆண்டில் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய 15 வங்கிக் கிளைகளுக்கு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினார்.

நிகழ்வில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளா் ஜார்ஜ் பாபு லாசா், திட்ட இயக்குநா் (மகளிர் திட்டம்) சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்தகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மணிகண்டன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 19 March 2023 7:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  2. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  5. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  6. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  7. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  8. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  9. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  10. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...