/* */

சூறை காற்றுடன் கனமழை - 2 ஆவது நாளாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

குமரியில் தொடரும் சூறை காற்றுடன் கனமழையால் 2 ஆவது நாளாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு.

HIGHLIGHTS

சூறை காற்றுடன் கனமழை - 2 ஆவது நாளாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேற்கு கடற்கரை பகுதிகளில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பலத்த காற்று வீசி வருகிறது.

இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விட்டு இருந்தனர்.

இந்நிலையில் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தூத்தூர் மற்றும் இனையம் மண்டலத்தை சேர்ந்த சுமார் 5000 க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 2 தினங்களாக செல்லவில்லை.

இதன் காரணமாக தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் 100 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டு உள்ளது.

Updated On: 28 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்