/* */

தொடர் கனமழை எதிராெலி: குமரி திற்பரப்பு அருவில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தொடர் கனமழை எதிராெலி: குமரி திற்பரப்பு அருவில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு
X

குமரி திற்பரப்பு அருவில் ஆர்ப்பரித்து காெட்டும் தண்ணீர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.

நேற்று அதிகாலை தொடங்கி பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் நீடித்து வரும் கன மழை காரணமாகவும் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

இதன்காரணமாக அணைகளில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே அணைகளில் இருந்து பெருமளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் 70 ஏக்கர் நிலபரப்பிலான விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது, மேலும் பரளியாறு, கோதையாறு தாமிரபரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது, மழை தொடர்ந்து நீடித்தால் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 12 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்