/* */

கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் ரேசன் மண்ணெண்ணை பறிமுதல்

குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் ரேசன் மண்ணெண்ணையை சொகுசு காருடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் ரேசன் மண்ணெண்ணை பறிமுதல்
X

சொகுசு காரில் கேரளாவிற்கு கடந்த இருந்த ஆயிரம் லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் விளவங்கோடு வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சிராயன்குழி பகுதியில் சோதனையின் போது அந்த வழியாக வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர், ஆனால் அதிகாரிகள் நிற்பதை கண்டதும் சொகுசு கார் நிற்காமல் சென்றது.

இதனை தொடர்ந்து சொகுசு காரை துரத்தி சென்ற போது குறுக்கு சந்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

தொடர்ந்து வாகனத்தை வட்டாட்சியர் சோதனை செய்தபோது 25 கேன்ங்களில் சுமார் 1000 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும் கேரளாவிற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மண்ணெண்ணை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்