/* */

குமரியில் தொடரும் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. மழையானது இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த கனமழையானது மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும், தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2, உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரித்து உள்ளது. இதனிடையே தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அலுவலகங்கள் செல்வோர், வாகன ஒட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும், கனமழை காரணமாக பாதிப்பை சந்தித்தனர். தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்து அவதியை உண்டாக்கியுள்ளது.

Updated On: 29 Sep 2021 11:04 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  7. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  8. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  9. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  10. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு