/* */

குமரியில் அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் கவலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குமரியில் அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் கவலை
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை உச்சம் அடைந்து படிப்படியாக குறைந்ததோடு, கடந்த இரண்டு மாதங்களாக நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 வரை இருந்தது.

ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சம் அடைய செய்து உள்ளது. நாகர்கோவிலில், ஒரே குடும்பத்தை சேர்ந்த டாக்டர் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், டாக்டர் வீடு இருந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 13 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?